டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் மட்டும் இருபது ரூபாய் என வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. என் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளில் முறைப்படி விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் வழக்கறிஞர்கள் குழு இன்று ஆய்வு செய்ய உத்தரவிட்ட விலைப்பட்டியல் வெளியே தெரியும் படி வைக்காத கடை ஊழியர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.