நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தயார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றும் போலீசாருக்கு அவசிய தேவை என்றால் மட்டுமே விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அடுத்த பத்து நாட்களுக்கு அவசியம் இல்லாமல் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் போலீசாரே உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுதந்திர தின விழா பாதுகாப்பை முன்னிட்டு போலீசாருக்கு 10 நாட்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.