தமிழகம்  முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஒயிட் ஃபில்டிங் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துமாறு காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.