பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வணிகவரி மற்றும் பதிவு துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் சனிக்கிழமைகளில் இயங்கும் நூறு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல் தைப்பூசம் அன்று05.02.2023 நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கு விலக்கு அளித்தும் உத்தரவிடுமாறு தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்திலிருந்து வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று மேலே கூறப்பட்டுள்ள நூறு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.1.2023 அன்று செயல்படுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.

அதேபோல் 5.2.2023 அன்று தைப்பூசத்தை முன்னிட்டு மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டதற்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்விரண்டு தினங்களை தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேலே கூறப்பட்டுள்ள 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.