தமிழகத்தில் பதிவு பணிகள் அதிகம் நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் இன்று (ஜன.,14) இயங்காது என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.   சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஜன.14ஆம் தேதி (இன்று) ஒருநாள் செயல்பாட்டில் இருந்து விலக்களித்து விடுமுறை வழங்க, தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வந்தது. இதை ஏற்று 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் தைப்பூச திருநாளான பிப்ரவரி 5ஆம் தேதியும் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.