தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றோம் மே 1ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தமிழக முழுவதும் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.