தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.