நாடு முழுவதும்இன்று  ஆகஸ்ட் 15ஆம் தேதி 76 வது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழாவின்போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடைபெற உள்ளதால் அதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது. சுதந்திர தின விழா நிகழ்ச்சி காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் இயங்கும் அனைத்து சில்லரை மதுபான விற்பனை கடைகளும் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது கடைகள் மற்றும் அதனுடன் இணைந்திருக்கும் மது கூடங்களும் மூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.