பிரபல வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் இன்று உயிரிழந்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக வாதாடி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில், 21 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ததும் இவர்தான். 64 வயதான இவர் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்