கனமழை காரணமாக சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் நடத்த விருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற இருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்து அளிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆளுநர் மாளிகையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை காரணமாக ஆளுநர் மாளிகை புல்வெளியில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், விருந்தினர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..