திருப்பூர்: காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓலப்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.பழையகோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுபாரை, பொன்னங்காலிவலசு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராபமரிப்புபணிகள் நடப்பதால், இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி மாலை 5 மணி வரை பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காபாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சுங்காரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

நெல்லை: திசையன்விளை தாலுகா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆற்றங்கரைபள்ளிவாசல், நவ்வலடி, தோட்டவிளை, தெற்கு புலிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம் பெட்டைகுளம், உறுமன்குளம் பகுதிகளில் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை மின்மணியம் இருக்காது. நெல்லை பழைய பேட்டை பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், பேட்டை, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருச்சி: கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தங்கையா நகர், உடையான்பட்டி ரோடு, கே.சாத்தனூர், செட்டியபட்டி, பாரிநகர், டோபிகாலனி, ஓலையூர், இ.பி.காலனி, கருண்யாநகர், அய்மான் கல்லூரி, கலிங்க நகர், படுகை, அன்பிலர் நகர், வடுகப்பட்டி, கவிபாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், இச்சிகாமாளப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி: எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் கோட்டர்ஸ், கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

நீலகிரி: அதிகரட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிகரட்டி, பால கொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணி ஹட்டி, நான்சச், ஆரு குச்சி, உலிக்கல், மேலூர், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதி நகர், தூதூர்மட்டம், கரும்பாலம், கிளன்டேல், கொலக்கொம்பை, பென்காம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.