சென்னையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியானது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் தமக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது.

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என குடும்பம் குடும்பங்களாக வந்து அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை தேடித் தேடி ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற்ற புத்தக விழாவில் 16 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 லட்சம் பேர் இந்த புத்தக கண்காட்சிக்கு வருகை தந்திருந்தார்கள்.