தமிழகத்தில் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வரும் நிலையில் கடந்த வாரம் 1943 இடங்களில் நடத்தப்பட்ட முகாம் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்த நிலையில் இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முகாமை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.