தமிழ்நாட்டில் ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது. அதன் அடிப்படையில் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் “இ – வாடகை” என்ற செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.