தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றது. கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று காலை 10 முதல் 12.30 மணி வரையிலும், 9,10 ஆம் வகுப்புக்கு மதியம் 2 முதல் 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.