தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் பேருந்துகளில் மழைநீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை, படிக்கட்டுகள் மற்றும் கண்ணாடி போன்றவைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.