தமிழகத்தில் மாணவர்களின் பல் பாதுகாப்பு குறித்து புன்னகை திட்டம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து செயல்படுத்தும் புன்னகை எனும் பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டம் இந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த திட்டம் சென்னையில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த புன்னகை திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. எனவே இந்த திட்டம் சார்ந்து சுகாதாரத் துறையின் மாவட்ட அலுவலர்கள் அணுகும் போது சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து இந்த திட்டம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் இந்த பணிகளின் போது அரசு சார்பாக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.