தமிழகத்தில் மாவட்டம் தோறும் சுகாதார நடை பயிற்சி தெரு உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சுகப்பிரசவங்களை ஊக்குவிக்க செவிலியர் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும். 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை கண்காணிக்க இல்லங்களிலேயே இளம் குழந்தை பராமரிப்பு சேவைகள் துவங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.