தமிழகத்தில் 33 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கும் வகையில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஏற்பாடுகளை செய்து வருகின்றது. அதாவது 20000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்குவதற்கு மற்றும் 6552 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைப்பதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் கற்று பயனடைய முடியும் என்பதற்காக டிஜிட்டல் வகுப்புகளுக்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் 53 ஆயிரத்து 349 ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கையடக்க கணினி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. மாதம் 1500 இணைய கட்டணத்துடன் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு எதற்காக 81 கோடியே 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.