தமிழகத்தில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இந்த வாரம் இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 2200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு 900 பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 1300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.