தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்தநிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். வெயில் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.