தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று இரவு முழுவதும் மழை பெய்யும் பட்சத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது.