தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாகத்துறை உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் மணல் கொள்ளை தடை இன்றி தொடர்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவிரி டெல்டா பகுதிகளை சேர்ந்த பத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அளித்த அமலாக்கத்துறை விசாரணையை தீவிர படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளது.