தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ,திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.