தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 330 சிவாலயங்களிலும் பிப்ரவரி 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம் தேதி காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி கொண்டாடப்படும் அனைத்து கோவில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையான மின் அலங்காரங்கள் மற்றும் பக்தர்கள் சிரமம் என்று தரிசனம் செய்யும் விதமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காத விதமாக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.