தமிழகத்தில் பணியில் காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து சுமார் 3,184 காவலர்களுக்கு 400 ரூபாய் பிப்ரவரி 1 முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அறிவிப்பின்படி அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய் இந்த மாதம் முதல் வழங்கப்படுகின்றது.