திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில்  தனக்கு சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக்கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனக்குறிப்பிட்டு, எனவே சாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீட்டு பலன் பெறுவது பாதிக்கப்படும்; வாரிசுரிமை சட்டங்களின் மூலம் பலன் பெற முடியாத நிலை ஏற்படும், அரசு உத்தரவுப்படி கல்வி நிலைய விண்ணப்பங்களில், சாதி மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்திசெய்யாமல், அப்படியே விட்டு விடலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.