தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை இனிமேல் பாக்கெட்டுகள் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருட்களின் தரம் குறைவதை தடுப்பது மட்டுமல்லாமல் இடையிலும் மாற்றம் இருக்காது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.