தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முதலில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன் பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது 3,5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்களின் கல்வி அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும் மதிப்பெண்ணிற்காக மாணவர்கள் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்துள்ளார்