சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேசிய வருவாய் வழி படிப்பு உதவித் தொகைக்கான (NMMS) தேர்வு நாளை நடக்கிறது. இந்த பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக பிப். 10 வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மிக்ஜாம் புயல் விடுமுறையை ஈடுசெய்ய அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என கூறப்பட்டிருந்தது