நாடு முழுவதும் பள்ளி மாணவர்களில் மேல்நிலை கல்வி பாதிப்படையாத வகையில் மத்திய கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மூலமாக ஒரு லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வு இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 6695 மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ள நிலையில் இன்று பிப்ரவரி 3 சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் 700 ஆசிரியர்கள் தேர்வு பணியில் இன்று ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.