தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 22 ஆம் தேதி நேற்றோடு நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும் ஆசிரியர்களும் பிரியாவிடை அளித்தனர். அடுத்த கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி படிப்புக்காக தயாராக உள்ளனர்