தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களானது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் 11ஆம் தேதி 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையானது தொடங்கி அக்டோபர் 25ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதற்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வை கணினி வழியே கடந்த வருடம் நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் நிர்வாக காரணத்தால் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இதனை அடுத்து இதற்கான தேர்வு தமிழக முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி(நாளை) நடைபெற உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.