தமிழகத்தில் விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய முடியாமல் இடைத்தரகர்களை நம்பி நஷ்டத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதனை தடுப்பதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தற்போது விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை ஒன்றை அரசு வழங்கியுள்ளது.

இந்த அட்டை மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து லாபம் பெறலாம். இதன் மூலமாக அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் விவசாயிகள் உழவர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேளாண் வணிகத்துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.