தமிழகத்தில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் உலக முதலீடாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் லண்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அவர் சுமார் ஒரு வார காலத்திற்கு வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அவருடன் சில துறை சார்ந்த முக்கிய அமைச்சர்கள் செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவு மே 2-ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.