செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 106 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனையில் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டும் 147 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெரிய நிறுவனங்கள் தங்களுடைய சமூகப் பங்களிப்புகளை அரசு சார்ந்த நலத்திட்டங்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் மாஸ்க் பொறுத்தவரை ஏற்கனவே அது குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டாயம் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.