தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். வடக்கு கேரளா கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.