தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.