தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கைத்தறி கற்றுக் கொடுத்து அதன் மூலமாக மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் மூலமாக 1.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்தேன் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் 18 முதல் 35 வயது வரை உள்ள எழுதப் படிக்க தெரிந்தவர்கள் இணைந்து பயன்பெறலாம். இதில் விருப்பமுள்ளவர்கள் www.loomworld.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.