தமிழகத்தில் இனிவரும் நாட்களில் உள் மாவட்டங்களில் இயல்பை விட இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமவெளி பகுதிகளில் அனேக இடங்களில் 38 முதல் 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மதிய வேளையில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.