பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அடுத்தடுத்த அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். முன்னதாக, ஏப்.12 வரை பள்ளிக்கு வர வேண்டும். 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், ஏப்.15 -19 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.