தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை அமல்படுத்த கோரி பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேரளாவில் உள்ள மது கடைகளில் மதுக்கடை ஊழியர்களுக்கு சுழற்சி முறை அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அம் மாநிலத்தில் மதுக்கடை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான விடுமுறையும் வழங்கப்படுகிறது. இதே போல தமிழகத்திலும் மது கடை ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்  என்றும், இவ்வாறு விடுமுறை அளிப்பதால் குடிமகன்கள் ஒருநாள் குடிப்பது தவிர்க்கப்படும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.