ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசு பணி நியமனத்திற்கு போட்டி தேர்வை ரத்து செய்ய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அண்மையில் சென்னை அன்பழகன் வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் ஆசிரியர்கள் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.