தமிழகத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுவிலக்கு தொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 10581 என்ற கட்டணமில்லா என்னை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மற்றும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் மேலாளர் ஆகியோரை கொண்டு நடத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.