தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனவரி 1ஆம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடவுள்ளது. அன்று முதல் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் 4, 5, 18, 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.