‘நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்’ என அண்ணாமலை கூறிக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். விருதுநகர் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை காங்கிரஸ் துவங்கிவிட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதிக்கீடு சரியாக வழங்க முடியும்.

தமிழகத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது. மோடி INDIA கூட்டணியை பலவீனப்படுத்த நினைக்கிறார். திமுக, பாஜகவிற்கு தான் போட்டி என அண்ணாமலை கூறுவது, ‘நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்’ என்பது போல் உள்ளது’ என்றார்.