தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45509 பேருக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறியுள்ள அதிகாரிகள், அதன் பிறகு உணவு வழங்கல் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.