அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி வேட்பாளரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலில் வாக்களிக்க செல்லாத தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி வழங்கப்பட்டிருந்தது.

ஆறு முறை இந்த தொகுதியில் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில், நேற்று வாக்களிக்க கூட செல்லாமல் தென்காசி தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.