உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். “தீபாவளிக்கு கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியவர் பிரதமர் மோடி. ஆனால் கோடைக்காலம் தொடங்கியவுடன் தாய்லாந்துக்கு விடுமுறையைக் கழிக்க சென்றவர் ராகுல் காந்தி. ஏழைக் குடும்பத்தின் மகன் நரேந்திர மோடி ஒருபுறமும், செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மகன் ராகுல்காந்தி எதிரெதிரே இருக்கின்றனர்” என அவர் கூறினார்.