தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை விரைவு சாலை, விக்கிரவாண்டி மற்றும் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மற்றும் திமுக மக்களவை தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற வாக்குறுதி இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.